சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, February 22, 2013

பிச்சைக்காரன்


ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,

''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'

''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'

''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'

''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'

''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'

''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன். என் வீட்டுக்கு வா. என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...