சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, February 19, 2013

பெரிய பொய்


ஆசிரியர் : எதுக்குடா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?

சுப்பு : ஒண்ணுமில்ல டீச்சர், கீழே இந்தப் பத்து ரூபா கெடந்ததை நாங்க ரெண்டு பேருமே பார்த்தோம். ரெண்டு பேர்ல யார் பெரிய பொய் சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் இது சொந்தம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் பொய் சொல்லிட்டு இருந்தோம். அதில யார் சொன்னது பெரிய பொய் அப்படீங்கிறதிலதான் எங்களுக்குள்ளே சண்டை.

ஆசிரியர் : ச்சே! உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு! உங்க வயசுலல்லாம் எனக்கு ஒரு பொய்கூட சொல்லத் தெரியாது. தெரியுமா?

சுப்பு : ப்பா! டீச்சர், இந்த பத்து ரூபா கண்டிப்பா உங்களுக்குத்தான்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...