சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, February 15, 2013

வாழ்க்கை


வேலையை எல்லாம் முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தார் அப்பா...

அவருடைய 5 வயது மகன், அவருக்காக வாசலில் காத்திருந்தான்..

மகன் : அப்பா, உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கலாமா ?

அப்பா : கேளு..

மகன் : நீங்க ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ சம்பாதிப்பீங்க?

அப்பா : அத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போற..

மகன் : சொல்லுங்கப்பா..

அப்பா : 100 ரூபாய்

மகன் : அப்போ, எனக்கு ஒரு 50 ரூபாய் தருவீங்களா..

அப்பா : (கோபத்தில்) உன் ரூம்ல போய் தூங்கு[மகனும் கோபத்தில் தூங்க சென்றான்]

கொஞ்ச நேரம் கழித்து தன் தவறை உணர்ந்த தந்தை மகனை பார்க்க செல்கிறார்...

அப்பா : மன்னிச்சிக்கோ.. வேலைல இருந்த கோபத்தை உன் மீது காட்டிவிட்டேன்.. இந்த நீ கேட்ட 50 ரூபாய்...

மகன் : நன்றி அப்பா...

மகன் தன் தலைகாணியின் அடியில் இருந்த சில ரூபாய்களை எடுத்து... அப்பா, இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு, உங்கள நான் ஒரு மணி நேரத்துக்கு வாங்கிக்கிறேன்,.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாங்க,, இரவு சாப்பாட உங்க கூட சேர்ந்து சாப்டனும்'னு ஆசைபடறேன்...!

உங்கள் அன்பானவர்களிடம் சிறது நேரம் ஒதுக்குங்கள், உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை மிகவும் அற்புதமானதாகும்...!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...