Sunday, February 10, 2013
ட்ராபிக் போலிஸ்
ட்ராபிக் போலிஸ்: ஹலோ சார், நாங்க அரைமணி நேரமா உங்கள கவனிச்சுகிட்டே வர்ரோம். நீங்க சாலை விதிகளை மதிச்சு கரெக்டா வண்டி ஓட்டிட்டு வர்ரீங்க. சாலை பாதுகாப்பு வாரத்த முன்னிட்டு காவல்துறை சார்பா 10,000 ரூபாய் பரிசு இந்தாங்க
அய்யாசாமி : அப்பா இந்த பணத்த வச்சு எப்டியாவது ரைவிங் லைசன்ஸ் எடுத்துடனும்.
போலிஸ் முறைத்து பார்க்க.......
அய்யாசமியின் மனைவி அவசரமாக :
"சார் அவர் சொல்ரத கண்டுக்காதிங்க அவர் குடிச்சிட்டு ஔர்ராரு"
கோபமடைந்த போலிஸ் "மரியாதையா வண்டிய விட்டு கீழ இறங்குடா" என்றார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்து அய்யாசாமியின் காது கேட்காத அம்மா: "நான் அப்பவே சொன்னேன் திருட்டு வண்டிய எடுத்துட்டு வெளிய போக வேண்டான்னு. பாத்தியா இப்ப போலிஸ்ல மாட்டிக்கிட்டோம்" என்று சொல்ல
அய்யாசமியின் மைன்ட் வாய்ஸ் சொன்னது
"மாப்பு மாறி மாறி வைக்கிறாங்களே ஆப்பூ..
Labels:
நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment