சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 27, 2013

யோசனை


பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்...

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி, இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி...

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும், காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து...

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார். முதலில் ஜன்னலை மூடுங்கள் ஒருத்தி செத்து விடுவாள். அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு...!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..

பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்...!


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...