Tuesday, February 26, 2013
ஏமாற்றம்
ஏமாற்றம்
அய்யாசாமி ஒரு கிராமத்து ஆசாமி.
ஒரு முறை சென்னை வந்திருந்தபோது கட்டிடம் அருகே பேருந்துக்காக ஒரு மஞ்சள் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த ஒரு முரட்டுத்தனமான ஆசாமி,
"இங்கே என்ன பண்ணிகிட்டிருக்க?" என்று அய்யாசாமியைப் பார்த்து கேட்டான்.
"இல்லை...இந்த கட்டிடம் இவ்வளவு உயரமா இருக்கே அதான் பார்த்துகிட்டிருக்கேன்"
"அப்படியேல்லாம் சும்மா பார்க்கக்கூடாது... நீ எத்தனை மாடி பார்த்தியோ அத்தனை மாடிக்கும் ஒரு மாடிக்கு 15 ரூபாய் விதம் எனக்கு கொடு"
அய்யாசாமியோ மறுபேச்சு பேசாமால்,
"நான் 4வது மாடி வரைதான் பார்த்தேன்" என்று 1 மாடிக்கு 15 விதம் 60 ரூபாயைக் கொடுக்க, அவன் சென்று விட்டான்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவன் அய்யாசாமியிடம் வந்து சொன்னார்,
"அவன் உங்களை ஏமாற்றி பணம் வாங்கி செல்கிறான்... ஏமாந்துவிட்டீர்களே" என்றான்.
அதற்கு அய்யாசாமி சொன்னார்,
"நான் இல்லை... அவன் தான் என்னிடம் ஏமாந்து செல்கிறான்.
வந்தவன் புரியாமல் விழிக்க,
"நான் 10 மாடி வரை பார்த்தேன்... ஆனால் 4 மாடி பார்த்ததாக அவனை ஏமற்றிவிட்டேன்" என்றார் அய்யாசாமி
Labels:
நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment