சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 27, 2013

நூறு சதவீதம்


அய்யாசாமி மதிப்பு வாய்ந்த ஒரு நாட்டின் அமைச்சர்.

ஒரு முறை பக்கத்து நாட்டு அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.

அங்கு அவருக்குக் கிடைத்த ஆடம்பரமான வரவேற்பைப் பார்த்து அதிசயித்து, அந்த அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எப்படி அவ்வாறு செலவழிக்க முடிகிறது என்று கேட்டார்.

அதற்கு அந்த பக்கத்து நாட்டு அமைச்சர், ஜன்னலைத் திறந்து காட்டி ஒரு பாலத்தைக் காட்டினார்.

"அதோ ஒரு பாலம் இருக்கிறதே... அதை நான் தான் கட்டினேன்... அதில் தனக்கு பத்து சதவீதம் கிடைத்தது... அதில்தான் இந்த வசதி வாய்ப்புகளெல்லாம்"

விருந்து முடிந்து சொந்த நாட்டுக்கு அய்யாசாமி வந்தபின், சுமார் ஒரு வருடத்திற்குப் பின், பக்கத்து நாட்டுக்காரரை தன் சொந்த விருந்தாளியாக அழைத்ததன் பேரில் அவரும் வந்தார்.

அய்யாசாமி கொடுத்த வரவேற்பைப் பார்த்து அவர் கதி கலங்கி விட்டார் பக்கத்து நாட்டு அமைச்சர். அவர் முகக் குறிப்பறிந்த அய்யாசாமி ஒரு ஜன்னலைத் திறந்து,

"அதோ பாலம் தெரிகிறதா?" எனக் கேட்டார்.

"கண் பார்வை தெரியும் தூரம் வரை பாலம் ஒன்றையும் காணவில்லையே?" எனச் சொன்னார் பக்கத்து நாட்டு அமைச்சர்.

அதற்கு அய்யாசாமி சிரித்துக் கொண்டேசொன்னார்,

"ஆமாம்,எனக்கு நூறு சதவீதம்"

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...