சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, February 9, 2013

துளசியும் சுக்குக் கசாயமும்


இமயமலையில் ஒரு உயரமான இடத்தில் ஒரு ஆசிரமத்தில் ஒரு துறவி இருந்தார்.

ஒரு சமயம் மலையேறும் குழுவில் வந்தவர்கள் அவரிடம்.'சுவாமி, இங்குள்ள குளிரை எங்களாலேயே தாங்க முடியவில்லையே!

தாங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?'என்று கேட்டனர்.

''துளசியும் சுக்குக் கசாயமும் இருக்கும் போதுகுளிர் ஒன்றும் செய்யாது.

சரி,நீங்கள் சுக்குக் கசாயம் சாப்பிடுகிறீர்களா?'' என்று கேட்டார்.'சாப்பிடுகிறோம்.'என்றனர் வந்தவர்கள்

.''அப்படியா,இதோ பாரும்மா துளசி,இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா,''என்றார் சாமியார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...