சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, February 19, 2013

தயக்கம்


இரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார் நம்ம அய்யாசாமி.

"சார்! ட்ரெயின்ல இருந்து நீங்க இறங்கி ரொம்ப நேரம் ஆச்சே...பிளாட்பாரத்துல தனியா நின்னுட்டு என்ன யோசிக்கிறீங்க? பெட்டிய நான் தூக்கறேன். 5 ரூபா கொடுங்க போதும்!" என்றான் போர்டர்.

"வேணாம்பா!"

"என்ன சார் நீங்க...பெட்டி பெருசா இருக்கு. எப்படி தூக்குவீங்க? கூலி கொஞ்சம் குறைச்சிக்கறேன் சார்"

"இல்லை வேணாம்பா"

"ஒருவேளை என்னால தூக்க முடியாதுன்னு யோசிக்கிறீங்களோ... நான் இதையெல்லாம் ரொம்ப சுலபமா தூக்குவேன் சார். 5 ரூபாய்க்கு இவ்ளோ யோசிக்கிறீங்களே!"

"காசுக்காக நான் யோசிக்கல"

"பின்னே"

"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...