அந்த சேல்ஸ்மேன் செம அப்செட்டாக இருந்தான். தனது வக்கீலைப் பார்க்கப் போனான்.
வக்கீலிடம், " சார், என்னோட மனைவி எனக்குத் துரோகம் செய்கிறாள் என்று நினைக்கிறேன்" என்றான்.
அதற்கு வக்கீல் "எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்" என்று கேட்டார்.
அதற்கு அந்த சேல்ஸ்மேன் சொன்னான்...
"நான் சேல்ஸ் விஷயமாக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வெளியே போய் விடுவேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வீட்டில் இருப்பேன். நானும் எனது மனைவியும் போன ஞாயிற்றுக்கிழமை படுக்கை அறையில் ரொம்ப மும்முரமாக இருந்தோம். சத்தமும் கொஞ்சம் ஜாஸ்திதான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டி தனது வீட்டிலிருந்து வார இறுதி நாட்களாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதாப்பா என்று கேட்டாள்" என்றான்.
No comments:
Post a Comment