சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, February 23, 2013

பிச்சைக்காரன்


நம்ம அய்யாசாமிக்கு திருமணமான புதிது.

எப்பொழுது கோவிலுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பிச்சைக்காரர் ஒருவருக்கு காசு போடுவது அய்யாசாமியின் வழக்கம்.

அன்றும் அப்படித்தான். இவர் ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட, அவன் கேட்டான்.

"ஏன் சாமி, முன்னாள் 15 ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டிருந்தீர்கள். அதன் பின் 10 ரூபாய் பிச்சை போட்டீர்கள். இன்று வெறும் 5 ரூபாய் போடுகிறீர்களே? அது ஏன்?"

அய்யாசாமி சொன்னார்

"திருமணமாகும் முன் என் விருப்பத்திற்குச் செலவு செய்தேன். அப்போது 15 ரூபாய் போட்டேன்.
திருமணம் ஆனவுடன் செலவு அதிகம் ஆனது 10 ரூபாய் போட்டேன்.
நேற்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் இல்லையா? அதனால்தான் 5 ரூபாய் போடுகிறேன்."

அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னான்,

"ஏன் சாமி.. அப்படின்னா என் காசை வைத்துத்தான் நீங்கள் குடும்பம் நடத்துகிறீர்களா?...உங்களுக்கு வெட்கமாக இல்லையா?"

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...